மீன்துள்ளி ஸ்ரீ சுடலைமாடசாமி திருக்கோயில் சித்திரை கொடை விழா.!

தென்காசி

மீன்துள்ளி ஸ்ரீ சுடலைமாடசாமி திருக்கோயில் சித்திரை கொடை விழா.!

மீன்துள்ளி ஸ்ரீ சுடலைமாடசாமி திருக்கோயில் சித்திரை கொடை விழா

 தென்காசி மே -11

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் மீன்துள்ளி கிராமத்தில் ஸ்ரீ சுடலைமாடசாமி திருக்கோயில் சித்திரை பெருங் கொடை விழா  நடைபெற்றது. கடந்த 02-05-2025 வெள்ளிக்கிழமை   பந்தக்கால் வைபவம் நடைபெற்றது.08-05-2025 குற்றால தீர்த்தத்துடன் 
குடி அழைப்பு நடைபெற்றது.

இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இரவு 10 மணிக்கு தனலட்சுமியின் வில்லிசை நடைபெற்றது.

இரவு 11.40 மணிக்கு கும்பம் ஏற்றி அதை தொடர்ந்து பூசமுத்து, வாசமுத்து, நேசமுத்து, தேசமுத்து அம்பாளுகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

09-05-2025 காலை தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது.காலை 11 மணிக்கு சாயமலை காளி கோயிலுக்கு பூஜைக்கு சென்றனர்.
 பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடைபெற்றது.

மாலை 6:00 மணிக்கு சுடலைமாடசாமிக்கு பொங்கல் பானை ஏற்றுதல் அதை தொடர்ந்து மொட்டை போடுதல், காது குத்துதல், நேர்த்திக் கடன் செலுத்துதல் நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு மம்சாபுரம் தனலட்சுமி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவு 11.50 மணிக்கு காளி பூஜையினை தொடர்ந்து  அம்பாளுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இரவு 11:57 க்கு மாயாண்டி மயானம் நிகழ்ச்சியும் இரவு 12.15 மணிக்கு சாமிக்கு ஊட்டு கிடாய் மற்றும் அன்னம் வழங்கப்பட்டது.

இரவு 12:30 மணிக்கு ஸ்ரீ மாயாண்டிக்கு அசைவ படையல் போடப்பட்டது.சிறப்பு அலங்காரம், சாம பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார்.

நேற்று காலை 7 மணிக்கு பொங்கல் பானை கிடாய், சேவல் வெட்டுதல் மற்றும் கும்பம் இறக்குதல்  நடைபெற்றது.

ஸ்ரீ சுடலை மாடசாமி திருக்கோயில் சித்திரை பெருங்கொடை விழாவுக்கு வந்த அனைத்து பக்தர்கள், பொது மக்கள், வரிதாரர்கள், நன்கொடையாளர்கள், உபயதாரர்கள், உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் விழா கமிட்டி சார்பாகவும் ,இந்து வெள்ளாஞ்
செட்டியார் சமுதாயம் சார்பாகவும் நன்றி தெரிவித்தனர்.

விழாவிற்கு வந்த அனைவருக்கும் சைவ, அசைவ உணவுகள், குடிநீர், சர்க்கரைப் பொங்கல், தங்கும் வசதி,  சுகாதார வசதிகள், பெண்களுக்கு பாதுகாப்பு வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்