12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு காங்கிரஸ் சிறுபான்மை மாவட்ட தலைவர் சலீம் வாழ்த்து.!
தென்காசி

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு காங்கிரஸ் சிறுபான்மை மாவட்ட தலைவர் சலீம் வாழ்த்து
தென்காசி மே 11
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது இதில் 7,92,494 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதம் 95.3 சதவீதமாக உள்ளது இந்நிலையில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் சலீம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தாங்கள் நினைத்த கல்லூரியில் நினைத்த பாடத்திட்டத்தில் சேர்ந்திடவும் எதிர்காலம் மகிழ்ச்சியாகவும் வாழ்வில் பல்வேறு சோதனைகளைக் கடந்து சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
AGM கணேசன்