ஸ்ரீ பேட்டை மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் .!

கிருஷ்ணகிரி

ஸ்ரீ பேட்டை மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் .!

கிருஷ்ணகிரி மாவட்டம்,  சூளகிரி பஜாஜ் தெருவில் இருக்கும்  ஸ்ரீ பேட்டை மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் .

கடந்த  7ஆம் தேதி அன்று கொடியேற்றம் மற்றும் சாந்தகர பூஜைகள் நடைபெற்றது. எட்டாம் தேதி அன்று அம்மன் பிரதிஷ்ட்டபனை செய்யப்பட்டது. ஒன்பதாம் தேதி அன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதேபோன்று மூன்று நாட்கள் அன்னதானம் நடைபெற்றது.

ஒன்பதாம் தேதி அன்று சுமார் 7,000 க்கும் மேற்பட்டோர் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

மூன்று நாட்கள் மொத்தம் சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பொதுமக்கள் சார்பாக மகா கும்பாபிஷேகமாக நடத்தப்பட்டது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டுச் சென்றனர் சுமார் 500 ஆண்டு காலத்திற்கு முன் இருந்த இந்த பழமையான மாரியம்மன் கோவிலை புதிதாக கட்டி புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்தப் பேட்டை மாரியம்மன் கோவில் சூளகிரி 40 பஞ்சாயத்திற்கு உட்பட்டது 150 கிராமங்கள் இந்த அம்மனை வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு சிறப்பாக அம்மன் தரிசனம் செய்து சென்றனர்.

நிகழ்வில் ஸ்ரீ நித்யஷேத்ரா பரதநாட்டிய விழா நடைபெற்றது.

மேலும் சிறப்பு விருந்தினராக வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கே பி முனுசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

எம்.எல்.ஏ - வுடன் மாநில மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

அதேபோன்று சூளகிரி காவல்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது 

அனைத்து அதிகாரிகளுக்கும் ஊர் பொதுமக்களுக்கும், நன்கொடை வழங்கி இந்த கோயிலுக்கு உதவி செய்த அனைத்து பெரியோர்களுக்கும், தாய்மார்களுக்கும், வியாபாரிகளுக்கும் சூளகிரி பேட்டை மாரியம்மன் கோவில் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.