திமுக வர்த்தகர் அணி ஆலோசனை மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்.!

தென்காசி

திமுக வர்த்தகர் அணி ஆலோசனை மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்.!

தென்காசியில் திமுக வர்த்தகர் அணி ஆலோசனை மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

தென்காசி, மே:- 11

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார்.  தென்காசி தெற்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் முத்துசெல்வி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார்.

இந் நிகழ்ச்சியில் தலைமை செயற்குழ உறுப்பினர் ஜேசுராஜன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜே கே ரமேஷ், வழக்கறிஞர் அணி ரகுமான் சாதத், மேலகரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவானந்தம், சுரண்டை அருணா, ஜோதிடர் மோகன், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர்கள் செல்வ விநாயகம், சண்முகராஜ்,  ஒன்றிய அமைப்பாளர்கள் முகமது இஸ்மாயில்,  கதிரவன், பூசை மணி கோபாலகிருஷ்ணன் பால் துரை ஆனந்த இசக்கி முத்து ஜஹாங்கிர் துணை அமைப்பாளர்கள் தனம், இசக்கி செல்வம் அப்துல்வகாப்   கோதரிஷா  தென்காசி நகர துணை அமைப்பாளர்கள் சன் ராஜா, சுரண்டை வர்த்தகர் அணி அமைப்பாளர் மாரியப்பன், துணை அமைப்பாளர் ராமசுப்பிரமணியன், கீழப்பாவூர் அமைப்பாளர் ஸ்ரீ முருகன், ஆலங்குளம் பேரூர் கணேஷ் பாண்டியன், வடகரை ரகுமத்துல்லா, பண்பொழி முத்துராமலிங்கம், துணை அமைப்பாளர் அப்துல் ரசாக். மேலகரம் வர்த்தகர் அணி அமைப்பாளர் கல்யாணி சுந்தரம், துணை அமைப்பாளர் சந்திரன், குற்றாலம் சுப்புராஜ் உள்ளிட்ட தென்காசி தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் 24 மணி நேரமும் கடைகளை திறப்பதற்கு அனுமதி தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், போரிலிருந்து நம்  நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக சென்னையில் பேரணி நடத்திய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் முடிவில் செல்வ விநாயகம் நன்றியுரையாற்றினார்.

செய்தியாளர்

AGM கணேசன்