இலஞ்சி ஓம் ப்ரணவா ஆசிரமத்தில் பீட்டர் அல்போன்ஸ் பிறந்தநாள் நிகழ்ச்சி.!
தென்காசி

இலஞ்சி ஓம் ப்ரணவா ஆசிரமத்தில் பீட்டர் அல்போன்ஸ் பிறந்தநாள் நிகழ்ச்சி
தென்காசி ஜூன் 10
தென்காசி மாவட்டம் இலஞ்சி ஓம் ப்ரணவா ஆசிரமத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான எஸ் பழனி நாடார் தலைமை வகித்தார்.
நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாடசாமி ஜோதிடர் மாவட்ட பொருளாளர் முரளி ராஜா முன்னாள் யூனியன் சேர்மன் சட்டநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் சண்முகவேல் வட்டாரத் தலைவர் பெருமாள் சுரண்டை நகர தலைவர் ஜெயபால் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ் இளவரசன், பொது செயலாளர் பிரேம்குமார் கவுன்சிலர் ரபீக் நகர நிர்வாகிகள், தேவராஜன், ஈஸ்வரன்,
பீர் முஹம்மது, மாரிமுத்து, மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் மாடசாமி ஜோதிடர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்