சிபில் ஸ்கோர் அறிக்கையை முழுமையாக கைவிட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு. !
கிருஷ்ணகிரி

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை அழிக்கும் சிபில் ஸ்கோர் அறிக்கையை முழுமையாக கைவிட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவினைக் கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை அழிக்கும் சிபில் ஸ்கோரை அறிக்கையை முழுமையாக கைவிட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ் ரெட்டி தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களை சந்தித்து புகார் மனுவினை கொடுத்தனர்,
அப்போது பேசிய விவசாயிகள்....
தமிழகத்தில் விவசாயிகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளாக இருந்தாலும் சரி, கூட்டுறவு வங்கியாக இருந்தாலும் சரி கடன் தரும்பொழுது சிபில் ஸ்கோரை பார்த்து கடன் தருவோம் என கூறுகிறார்கள். விவசாயிகளுக்கு இந்த சிபில் ஸ்கோரை வங்கிகள் பயன்படுத்தினால் இதில் விவசாயிகள் பயனடைய முடியாது. காரணம் விளைகின்ற பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் இல்லாததால் விலை கிடைப்பதில்லை இதனால் விவசாயிகள் கடனாளிகளாகத்தான் இருக்கிறார்கள்.
இதனால் சிபில் ஸ்கோரை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர். உடன் கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ