ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி மிளகாய் வத்தல் யாகம் : மும்பை நடிகை பங்கேற்பு.!
கிருஷ்ணகிரி

ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி மிளகாய் வத்தல் யாகம் : மும்பை நடிகை பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ராகு கேது ப்ரீத்திக்காக மிளகாய் வத்தல் யாகம் செய்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் இந்தகோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் பங்கேற்ற மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. அப்போது ஸ்ரீமகா பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் மும்பையை சேர்ந்த நடிகை தமன்னா கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
வழிபாட்டில் கலந்து கொண்ட மும்பை நடிகை, தமன்னா பேசும்போது மும்பையில் இருந்து பெங்களூர் வந்து அதன் பின் ஓசூரில் உள்ள இந்த கோயிலில் வழிபாட்டுக்காக வந்துள்ளேன், மிளகாய் வத்தல் யாகத்தில் கலந்து கொண்டேன், மிளகாய் வத்தல் யாகம் நன்றாக இருந்தது. சுவாசம் புத்துணர்வை அளித்துள்ளது. இந்த கோயிலில் பாசிட்டிவ் எனர்ஜி உள்ளது அனைவரும் கலந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் நல்லது நடக்கும் என கூறினார்.
செய்தியாளர்
மாருதி மனோ