தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை மனு.!

தென்காசி

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை மனு.!

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை மனு

தென்காசி மே 09


தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம்
முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர்  வழக்கறிஞர்
பொ.சிவபத்மநாதன்  நேரில் சந்தித்து
ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கந்தசாமி  கொடுத்த கோரிக்கை மனுவின் அடிப்படையில்
அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கும்
பள்ளியில் பயில்கிற மாணவ, மாணவியர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கிட தனி குடி நீர்த்தொட்டி அமைத்திட வேண்டியும் பள்ளிக்கு  வெளியே சாக்கடை நீர் தேங்கி இருக்கிறது அந்த சாக்கடையை நீர் செல்வதற்கு முறையாக வாறுகால் அமைத்திட வேண்டியும் மழைக்காலங்களில் பள்ளியினுள் தேங்குகிற தண்ணீர் செல்வதற்கு வாறுகால் அமைத்திடவும் சுமார் 1400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பள்ளியில் பயின்று வருகிறார்கள்.

ஆனால் போதுமான விளையாட்டு மைதானம் இல்லை அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியும்  
பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதால் தேசிய நெடுஞ்சாலையை காலை, மாலையில் கடக்கிற பொழுது பள்ளி மாணவர்கள் பாதிப்படையாமல் பள்ளிக்கு வருவதற்கு ஏதுவாக குறித்த நேரங்களில் மட்டும் காவலர்களை அதில் நியமித்திட வேண்டியும் பள்ளி மாணவர்கள் வந்து செல்வதற்கு நிரந்தரமாக நான்கு வழிச்சாலையில் நடை மேடை அமைத்து தர வேண்டியும் கொடுத்த கோரிக்கை மனுவினை  அமைச்சரிடம்  வழங்கினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமித்துரை முன்னாள் கடையநல்லூர் ஒன்றிய கழகச் செயலாளர் 
காசி தர்மம் துரை முன்னாள் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் மேகநாதன் ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்