காரப்பாக்கத்தில் 20 சவரன் தங்க நகை திருடு போன வழக்கில் 5 பெண்கள் கைது. 25 சவரன் தங்க நகைகள் பறிமுதல். !

சென்னை

காரப்பாக்கத்தில் 20 சவரன் தங்க நகை திருடு போன வழக்கில் 5 பெண்கள் கைது. 25 சவரன் தங்க நகைகள் பறிமுதல். !

காரப்பாக்கத்தில் வீட்டின் சாவியை எடுத்து திறந்து 20 சவரன் தங்க நகை திருடு போன வழக்கில் 5 பெண்கள் கைது. 25 சவரன் தங்க நகைகள் பறிமுதல். 

வீட்டை பூட்டி விட்டு சாவியை வைத்து செல்லும் வீடுகளை குறி வைத்து திருட்டு, இரண்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

சென்னை காரப்பாக்கம்ம், பல்லவன் குடியிருப்பு, 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் டில்லிபாபு(33), இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 

இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கடந்த 7ம் தேதி சொந்த ஊர் சென்று விட்டனர்.

10ம் தேதி காலை டில்லிபாபு வீட்டை பூட்டி விட்டு சாவியை அருகில் உள்ள ஷூவில் வைத்து விட்டு வேலைக்கு சென்று, மாலை ஊருக்கு சென்ற மனைவி குழந்தையை கண்ணகி நகர் பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்து, வீட்டின் பூட்டை சாவி போட்டு திறந்துள்ளார். 

வீட்டை திறந்த உடன் டேபிள் மீது நகை வைக்கும் பெட்டி இருந்தது, பீரோவில் சென்று பார்த்த போது அதில் சாவி இருந்துள்ளது, 20 சவரன் நகைகள் மாயமாகியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். 

தகவலின் பேரில் கண்ணகி நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜ்குமார் நிகழ்விடம் சென்று ஆய்வு செய்து, கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக 5 பெண்களை கைது செய்து விசாரித்தனர். 

விசாரணையில் அவர்கள் எழில் நகரை சேர்ந்த சுமதி(18), மீனா(30), ரம்யா(21), கஸ்தூரி(23), கலைவாணி(25), என்பதும் இவர்கள் பகல் நேரத்தில் பெரிய பெரிய வீடுகளை குறி வைத்து பூட்டி இருந்தால் அருகில் சாவி வைத்துள்ளார்களா என தேடிப் பார்த்து வீட்டை திறந்து நகையை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

கடந்தாண்டு ஒரு வீட்டிலும், இந்த மாதம் 10ம் தேதி ஒரு வீட்டிலும் சுமார் 30 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். 

25 சவரன் தங்க நகைகளை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்து போலீசார் 5 பேரையும் சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

செய்தியாளர்

      S S K