அனகாபுத்தூரில் காரில் கடத்திய 102 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது. !
சென்னை

அனகாபுத்தூரில் காரில் கடத்திய 102 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது. !
சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக இரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அனகாபுத்தூர் மதுரவாயல் புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் அவ்வழியே வந்த கார் ஒன்றை மடக்கி சோதனை செய்ததில் காரில் நான்கு மூட்டைகளில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
காரில் இருந்த இருவரையும் கைது செய்து 102 கிலோ கஞ்சா, கஞ்சாவை கடத்திய கார், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் மதுரையை சேர்ந்த பரமன்(45), டேனியல்ராஜ்(34), இருவரும் ஆந்திர மாநிலம் நரசிங்கபட்டினத்தில் கஞ்சா வாங்கிக் கொண்டு மதுரை செல்லும் போது போலீசில் சிக்கியுள்ளது தெரியவந்தது. இருவர் மீதும் ஏற்கனவே கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இருவர் மீதும் சங்கர் நகர் போலீசார் கஞ்சா வழக்குப் பதிவு செய்து சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றுள்ளனர்.
செய்தியாளர்
S S K