கடையம் வீர உலகம்மாள் நடுநிலை பள்ளியில் செம்மொழி தின விழா .!
தென்காசி

கடையம் வீர உலகம்மாள் நடுநிலை பள்ளியில்
செம்மொழி தின விழா
தென்காசி ஜூன் 6
தென்காசி மாவட்டம், கடையம் சரகம் வீர உலகம்மாள் நடு நிலைப்பள்ளியில் இன்று "செம்மொழி தின விழா" கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாகிகள் பூபதி நரேந்திரன் தலைமை வகித்தனர். தலைமையாசிரியர் மணிமேகலை வரவேற்புரை ஆற்றினார், வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் தமிழ் மொழியின் வளர்ச்சி மற்றும் சிறப்பு குறித்து மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.
இந் நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர் பிரகாஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியின் ஏற்ப்பாடுகளை ஆசிரியர்கள் கோகிலா, பரமகல்யாணி ரஞ்சிதம், ஹெலன் ஜான்சிராணி, இராமலட்சுமி, முருகன், நந்தினி, ஜெயவனிதா, கனகஜோதி ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்