பள்ளிகரணையில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு 25 வது கராத்தே பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி .!
சென்னை

பள்ளிகரணையில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு 25 வது கராத்தே பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை பள்ளிகரணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கராத்தே பயிற்சி பெற்ற ஏராளமான மாணவர்கள் தங்களது படி நிலையை முடித்து அடுத்த படி நிலைக்கு முன்னேறிச் சென்றுள்ளனர். சிலர் மாஸ்டர்களாக முன்னேறி உள்ளனர்.
அவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சியும், படி நிலையில் முன்னேறிய மாணவர்களுக்கு அவரவர்களுக்கு ஏற்ப ஊதா, மஞ்சள் நிற பெல்ட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
25வது பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சியினை 8வது டான் பிளாக் பெல்ட் ரெட் அண்ட் வொயிட் அஜய் பெருமாள் ஒருங்கிணைத்து நடத்தினார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆல் இந்தியா யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் அமைப்பின் பொதுச் செயலாளரும், மூத்த பத்திரிகையாளருமான ச.சாந்தகுமார், அசோக சக்கர விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் தந்தை வரதராஜன் மற்றும் திருஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கேற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்களான மூத்த பத்திரிகையாளர் சாந்த குமார் மற்றும் வரதராஜன், திருஞானம் உள்ளிட்டோருக்கு மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் தற்காப்புகலை பயின்ற கராத்தே மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஓடு உடைப்பது, பெரிய கல்லை உடலின் மேல் வைத்து உடைப்பது, என தங்களின் கடுமையான பயிற்சியின் மூலம் உடலை வலிமையாக வைத்திருப்பதை காட்டினர்.
மாஸ்டர்களாக படி நிலையை அடைந்த மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பிளாக் பெல்ட், சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர். அவர்களது பெற்றோர்களும் கெளரவிக்கப்பட்டார்கள்.
மேலும் ஏராளமான மாணவர்கள் தங்களுக்காக பெல்ட்களையும், சான்றிதழையும் பெற்றனர்.
நிகழ்வில் பேசிய மூத்த செய்தியாளர் சாந்தகுமார் மாணவர்களின் உடல் மற்றும் மன வலிமையை தாண்டி சமூகத்தில் தயக்கம் இல்லாமல் அனைவரிடமும் பழகவும், புதிய அனுபவங்களை கற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தினார், மேலும் அடிப்படை சட்டத்தை படிக்கவும், அப்போது தான் சமூகத்தில் எதையும் எதிர்கொள்ள முடியும் சரி எது தவறு எது என்பதை புரிந்து நடந்து கொள்ள முடியும் என்றார். பிளாக் பெல்ட் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
செய்தியாளர்
S S K