மடிப்பாக்கத்தில் காதல் விவகாரத்தில் பெண்ணின் அண்ணன் மீது பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயற்சி .! மூவர் கைது செய்த போலீசார். !
சென்னை

மடிப்பாக்கத்தில் காதல் விவகாரத்தில் பெண்ணின் அண்ணன் மீது பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயற்சி மூவர் கைது.
சென்னை மடிப்பாக்கம் அடுத்த உள்ளகரம், பாரதி குறுக்கு தெருவில் வசித்து வருபவர் ரஞ்சித்குமார்(எ) வேலு(20), இவரது தங்கை மற்றும் தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு நெல்சன் மற்றும் ஜெய்குமார் ஆகிய இருவரும் ரஞ்சித் குமார் வீட்டிற்கு வந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, ரஞ்சித்தின் தங்கைக்கு போன் செய்து உன் அண்ணனை வெளியில் வரச் சொல் என கூறி வரவழைத்து அவரது செல்போனையும் பறித்துக் கொண்டு உன் தங்கையை அப்படித் தான் காதலிப்பேன் என்ன செய்வாய் உன்னை கொலை செய்து விடுவேன் என கூறி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
பின்னர் ரஞ்சித் குமார் தனது நண்பர்களோடு சேர்ந்து ஜெய்குமார் இருசக்கர வாகனத்தை மெக்கானிக் கடையில் இருந்து எடுத்து வந்து வைத்துக் கொண்டு நெல்சனுக்கு போன் செய்து ஜெய்குமாரின் இருசக்கர வாகனம் வேண்டுமென்றால் தனது இருசக்கர வாகனத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
உடனே நெல்சன், ஜெய்குமார் கோகுல் உள்ளகரம் வந்து பெட்ரோல் குண்டு வீசி விட்டு இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்று விட்டனர். இதில் ரஞ்சித்குமார் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இது குறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து தற்போது மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் ரஞ்சித்குமார் தங்கை 12ம் வகுப்பு முடித்து விட்டு நங்கநல்லூரில் துணிக்கடை ஒன்றில் வேலை செய்யும் போது நெல்சனிடம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அப்போது நெல்சனின் அம்மா மற்றும் அக்கா இருவரும் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கையை செருப்பால் அடித்து விட்டு சென்றதாகவும் அதனால் தங்கையை பாட்டி வீட்டிற்கு அப்போது அனுப்பி வைத்தாகவும், அச்சமயம் பழவந்தாங்கல் ரயில் நிலையம் வந்து ஊருக்கு அனுப்பக்கூடாது என சண்டையிட்டு வாக்குவாதம் செய்த போது நெல்சனை அடித்து அனுப்பியதால் ஆத்திரத்தில் அவ்வப்போது குடித்து விட்டு செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி சண்டையிடுவார் இந்நிலையில் தான் நேற்று பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
S S K