தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா.!

தென்காசி

தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா.!

கடையநல்லூரில்
தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர்
கூட்டணி சார்பில் முப்பெரும் விழா

தென்காசி ஏப் 27

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாரம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா, நல்லாசிரியருக்கு பாராட்டு விழா, தென்காசி மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்ற பள்ளி பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா மேலக்கடையநல்லூர் சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் வைத்து நடை பெற்றது.

இவ் விழாவிற்கு கடையநல்லூர் வட்டார தலைவர் ஆறுமுகசாமி தலைமை வகித்தார்.  தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்ட தலைவர் ஆரோக்கிய ராசு மேனாள் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் மாநில செயற்குழு உறுப்பினர் மருது பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கடையநல்லூர் வட்டார
செயலாளர் ரமேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார்.இவ் விழாவில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் பூபாண்டிபுரம் தலைமை ஆசிரியை சந்திராள் சொக்கம்பட்டி இந்து தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சண்முகத்தாய், ஆர்.சி தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஸ்டெல்லா பாக்கிய மேரி கடையநல்லூர் மசுதுதைக்கா பள்ளி ஆசிரியை பாத்திமா ஆகியோரின் பணி நிறைவை பாராட்டியும், தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன், நல்லாசிரியர்விருதுபெற்ற துரைச் சாமிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மீனாட்சியை பாராட்டியும் தென்காசிமாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின்கேடயம் பெற்ற ஆனைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மோதிலால்  மற்றும் ஆசிரியர்களை பாராட்டியும் நல்லாசிரியர் ரசூல் அகமது இப்ராஹிம்,  உஸ்மான், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், மேனாள் தலைமை ஆசிரியர் செந்தூர்பாண்டியன், வருவாய் ஆய்வாளர் மனோகர், பட்டதாரி ஆசிரியர் முத்துக் குமார், துரைசாமி புரம் பள்ளி நிர்வாகி ஜெயபிரகாஷ், தலைமை ஆசிரியர்கள் ஆனந்த்   தேவதாசன், வட்டார பொறுப்பாளர்கள் குமாரவேல் முத்துலட்சுமி சிவசங்கர் ரவிச்சந்திரன், மகேந்திரன் சுதாகரன் முத்துராமலிங்கம் அசோகன் ஆரோக்கியமேரி மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கி பேசினர். இறுதியில் கடையநல்லூர் வட்டாரம் சார்பில் பணிநிறைவு ஆசிரியர்கள் நல்லாசிரியர் மற்றும்சிறந்த பள்ளிக்கு ஏர் கூலர் நினைவு பரிசும் தென்காசிமாவட்ட அமைப்பின் சார்பாகவும் நினைவு பரிசுகளும்வழங்கப்
பட்டது.  முடிவில் வட்டார பொருளாளர் குமரேசன் நன்றி கூறினார்.விழா நிகழ்ச்சிகளை ஆனைகுளம் பள்ளி தலைமை ஆசிரியர் மோதிலால் தொகுத்து வழங்கி பேசினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கடையநல்லூர் வட்டார பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்