முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ஏ.பி. எஸ் சண்முகசுந்தரம் நினைவேந்தல்.!

தென்காசி

முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ஏ.பி. எஸ் சண்முகசுந்தரம் நினைவேந்தல்.!

தென்காசியில் முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ஏ.பி. எஸ் சண்முகசுந்தரம் நினைவேந்தல்

தென்காசி - ஏப் 27 

தென்காசி முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர்  ஏ.பி.எஸ். சண்முகசுந்தரம்  5வது நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா  மதுரம் மினி அரங்கில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பணி நிறைவு வனச்சரக அலுவலர்பொன்ராஜ் தலைமை வகித்தார். தொழிலதிபர் ராதாகிருஷ்ணன் ,
முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மருத்துவர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.

தெற்குமாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் நகர கழக செயலாளர் ஏ.பி.எஸ் . சண்முகசுந்தரம்  படத்தினை திறந்து வைத்து வரும் ஆண்டுகளில் மாவட்ட கழகம் சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவியுடன் இவ்விழா மேலும் சிறப்பாக நடைபெறும் என கூறினார். தென்காசி நகர்மன்றத் தலைவர் சாதிர் மலரஞ்சலி செலுத்தி அவர் ஆற்றிய கட்சி மற்றும் நகர்மன்ற வளர்ச்சி பணிகளை பற்றி கூறினார்.அவரது காலத்தில் அவரோடு பயணித்த கழக முன்னோடிகளான ஆயான் நடராஜன், தெட்சினா மூர்த்தி, சேக்பரீத், முத்துசாமி, ஓய்வூதியர் சங்கம் சேக் சலீம் , ஆசிரியர்கள் பிச்சைக் கனி, சுரேஷ்குமார், பிரேம், செய்யது இப்ராகிம் , திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கம் மணிமாறன் ,பாலன்,வழக்கறிஞர் ஐயப்பன்,தலைமை ஆசிரியர்கள் பாலமுருகன் , ராமமூர்த்தி இளைஞரணி பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக அண்ணாரின் புதல்விகள் ஜெயந்தி, கீதா, வெண்ணிலா, மனைவி அருணா சலத்தம்மாள் மருமகள் மகேஸ்வரி உட்பட பலர் இணைந்து குத்து விளக்கு ஏற்றினர். ஆசிரியர் பிச்சையா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை புதல்வரும் தமிழ்நாடு உயர்நிலை மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவருமான ஆசிரியர் ஐயப்பன் செய்திருந்தார்.

செய்தியாளர்

AGM கணேசன்