மருத்துவக் கழிவுகள் விதிமுறைகளை மீறி கொட்டுபவர்களுக்கு 3 ஆண்டு சிறை.!

சட்டப்பேரவை

மருத்துவக் கழிவுகள் விதிமுறைகளை மீறி கொட்டுபவர்களுக்கு 3 ஆண்டு சிறை.!

மருத்துவக் கழிவுகளை விதிமுறைகளை மீறி கொட்டுபவர்களுக்கு விசாரணை இன்றி நேரடியாக சிறை என்ற கடும் சட்டம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்படும் என நேற்று செய்தி வெளியானது.

இதற்கான சட்ட முன்வடிவை இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில்  திடீர் திருப்பமாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இந்த சட்ட முன்வடிவை தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி மருத்துவக் கழிவுகளை தவறான முறையில் கொட்டுபவர்கள் எதிர்கொள்ள வேண்டிய தண்டனை மிக கடுமையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

மருத்துவ மற்றும் ஆய்வகங்களில் இருந்து உருவாகும் உயிரி கழிவுகள் சரியான முறையில் நிர்வகிக்கப்படாதால், அது சுற்றுச்சூழலையும் மக்களின் ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கும்.

குறிப்பாக, அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் முறைகேடாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதற்கான புகார்கள் அதிகரித்து வருகின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும் இனி இந்த வகை தவறுகள் செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இன்றைய சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.