மா விவசாயிகளுக்காக முதல்வரின் கடிதத்தை ஒன்றிய அமைச்சரை சந்தித்து கொடுத்த அமைச்சர் அர.சக்கரபாணி. !
கிருஷ்ணகிரி

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி தமிழ்நாட்டின் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை புதுடெல்லியில் சந்தித்து தமிழக அரசு சார்பாக மனு வழங்கினார்.
உடன் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் திருமதி.கனிமொழி கருணாநிதி, நாடாளுமன்ற மாநிலங்களவை திமுக குழு தலைவர் திரு.திருச்சி.N.சிவா, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.தே.மதியழகன்.,MLA, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஒய்.பிரகாஷ்.,MLA அவர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ