உறைவிட பள்ளியில் ஆசிரியர் பணி குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை. !

கிருஷ்ணகிரி

உறைவிட பள்ளியில் ஆசிரியர் பணி குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை. !

உறைவிட பள்ளியில் ஆசிரியர் பணி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் கொல்லப்பள்ளி, தளிகொத்தனுார், தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் செயல்படும் கே.ஜி.பி.வி., உறைவிடப்பள்ளிகள், கக்கதாசம், தேன்கனிக்கோட்டை, அத்திமுகம் ஆகிய இடங்களில் செயல்படும் என்.எஸ்.சி.பி.ஏ.வி., உறைவிடப் பள்ளிகளில் பணிபுரிய, தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட பெண் ஆசிரியர்கள் தேவை. 

மேற்குறிப்பிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. உறைவிடப் பள்ளிகளில் தங்கி பணிபுரிய வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பாடத்தில், இளநிலை பட்டத்துடன் பி.எட்., மற்றும் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் அனைத்து சான்றுகள் (நகல்) மற்றும் அனுபவ சான்றுகளுடன், கே.ஜி.பி.வி., உறைவிடப்பள்ளி, போலுப்பள்ளி, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி மாவட்டம், என்ற முகவரிக்கு வரும், 30க்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்

AGM கணேசன்