மர்ம நபர் இரவில் சுற்றித் திரிவதாக எழுந்த புகாரை அடுத்து, அந்த நபர் பெண்களின் உள்ளாடைகளை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.!
சென்னை

பெருங்களத்தூரில் மர்ம நபர் இரவில் சுற்றித் திரிவதாக எழுந்த புகாரை அடுத்து, அந்த நபர் பெண்களின் உள்ளாடைகளை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
பீர்க்கன்காரணை போலீசார் மர்ம நபரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் காயபோட்டுள்ள பெண்களின் உள்ளாடைகள், ஆடைகளை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சமீப நாட்களாக பெருங்களத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம நபர் ஒருவர் இரவு நேரங்களில் வீட்டின் கதவை தட்டுவதாகவும், சுவர் ஏறி குதித்து செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில், பெண்களின் உள்ளாடைகளை திருடும் மர்ம நபரால் பெண்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பீர்க்கன்காரணை போலீசார் பெண்கள் உள்ளாடைகளை திருடும் மர்ம நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்
S S K