மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். !

Communist part of india

மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். !

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் திருப்பத்தூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்  மாவட்ட துணை செயலாளர் நந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சுந்தரேசன் கலந்து கொண்டு மத்திய
மாநில அரசுகளை கண்டித்து கண்டன உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில். அதானியின் ஊழலுக்கு துணை போகும் மத்திய அரசு உடனடியாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை நடத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணியை துவக்கிட வேண்டும். 

மாநில அரசு உயர்த்தியுள்ள சொத்துவரி, வீட்டு வரி உயர்வை கைவிட வேண்டும் என பேசினார்.

இதில் நகர செயலாளர் முருகன்,  மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சாமிக்கண்ணு, பெருமாள், முருகன், வெங்கடேசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு விவசாயி சங்க மாவட்ட செயலாளர் முல்லை நன்றி கூறினார்.

ந.லெங்கடேசன்