அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மன்ற துவக்க விழா

திண்டுக்கல்

ரெட்டியார்சத்திரம்-அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பாக வணிகவியல் மன்ற துவக்க விழா நடைபெற்றது
                                       ‌‌                          ‌ திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் அரசு கலைக் மற்றும் அறிவியல் கல்லூரியில்  வணிகவியல் துறை சார்பாக வணிகவியல் மன்ற துவக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் சியாமளாதேவி வரவேற்புரையாற்றினார் , வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சரவணன் வாழ்த்துரை வழங்கினார், முனைவர்  மகாலட்சுமி முன்மொழிந்தார் அதனைத் தொடர்ந்து இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் அருப்புக்கோட்டை  முனைவர் ஆனந்த் (learning Entrepreneurship)   என்ற தலைப்பில் உரையாற்றி மாணவ மாணவிகளிடையே வணிகவியலின் முக்கியத்துவத்தை மிகத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார் .

குறிப்பாக மாணவ மாணவிகள் தங்கள் வாழ்வில்  படித்து முடித்தவுடன் எவ்வாறு பயிற்சியும் முயற்சியும் மேற்கொள்ள வேண்டும் என்பதை மிக சுருக்கமாக ஆர்வம், வேலை, யோசனை, கவனம், உந்துதல், மேம்படுத்துதல், சேவை, தொடர்ந்து என எட்டு தலைப்புகளை எடுத்துரைத்து அந்த தலைப்பிற்கு ஏற்ப சிறு குறு கதைகளை கூறி அவர்கள் நன்கு புரிந்து கொள்ளும் வகையில் புராணக் கதைகளை நகைச்சுவையாக எடுத்துக் கூறியும், பொது அறிவுகள் பற்றி அனைவரும் சிந்திக்கும் வகையில் எடுத்துரைத்தது அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.

இறுதியாக விழாவில் கலந்து கொண்ட வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் கௌதம் நன்றியுரை ஆற்றினார்.

செய்தியாளர்

அழகர் சாமி