திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் 2-வது நாளாக ஆய்வு

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் 2-வது நாளாக ஆய்வு


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவரும், வேடசந்தூர் எம்.எல்.ஏ-வுமான காந்திராஜன் தலைமையில் மதிப்பீட்டு குழுவினர் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 2வது நாளாக ஆய்வு செய்தனர்.

இதில்  வடமதுரை ஊராட்சி ஒன்றியம், குளத்தூர் ஊராட்சியில் தடுப்பணை கட்டுமான பணிகள் மற்றும் பாலம் கட்டுமான பணிகள்,

அயோத்திதாசர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம் கட்டுமான பணிகள்,    எரியோடு நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மற்றும் பயணியர் விடுதி, வேடசந்தூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் மற்றும் உழவர் சந்தையை ஆய்வு செய்தனர்.

அப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும்  தமிழக சட்டப்பேரவை  மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

அழகர் சாமி