சித்தையன் கோட்டை - ஆத்தூர் ஒன்றிய ஆ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் சார்பாக எம்ஜிஆர் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

திண்டுக்கல்

சித்தையன் கோட்டை - ஆத்தூர் ஒன்றிய ஆ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் சார்பாக எம்ஜிஆர் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

சித்தையன் கோட்டை - ஆத்தூர் ஒன்றிய ஆ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் சார்பாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36 ஆவது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ‌

இதில் அதிமுக சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, உறுப்பினர்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் அதிமுக நிர்வாகிகள் சார்பாக சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் திடலில் அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது .  

இந்நிகழ்வில் கோபி மாவட்ட மாணவரணி செயலாளர், முகமது ஹாஜியார் ஆத்தூர் மேற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர், முகமது அலி பேரூர் கழக செயலாளர் , ரமேஷ் குமார் மாவட்ட பிரதிநிதி, அக்பர் அலி அவைத்தலைவர்,  முகமது அலி ஜின்னா ஆத்தூர் மேற்கு ஒன்றிய சிறுபான்மை அணி செயலாளர்,   சொக்கலிங்கபுரம் பாண்டி  வார்டு செயலாளர்,பேரூர் கழகப் பொருளாளர் வெள்ளைச்சாமி , வார்டு செயலாளர் சந்திர போஸ், அதிமுக நிர்வாகி தங்கச்சடை மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி   மரியாதை செலுத்தினர்.

அழகர் சாமி