ஆந்திராவிவ் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட உயர் ரக கஞ்சா. ! கையும் களவுமாக பிடித்த காவல் துறை.!

குற்றம்

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து உயர்ரக கஞ்சா கடத்தி வந்த நபர் சென்னையில் கைது.

22 கிலோ கஞ்சா பறிமுதல். 

சென்னை பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் நெடுமாறன் தலைமையில் பள்ளிக்கரணை மேம்பாலம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சந்தேகத்திற்கு இடமாக  சூட்கேஸ்  உடன் சுற்றித் திரிந்த நபரை பிடித்து விசாரித்த போது கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.  

அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தபோது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சத்யபாபு(38), என்பதும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

பின்னர் அவரிடமிருந்து 22 கிலோ உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.