உள்துறை தர இயலாது 3 ல் ஒன்றை தேர்வு செய்யுங்கள் ஏக்நாத் ஷண்டேவிற்கு பா ஜ க அறிவுறுத்தல்.!

Yeknath Shindey, BJP

உள்துறை தர இயலாது 3 ல் ஒன்றை தேர்வு செய்யுங்கள் ஏக்நாத் ஷண்டேவிற்கு பா ஜ க அறிவுறுத்தல்.!
ஏக்நாத் ஷிண்டே

மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்றுள்ளனர்.

உள்துறையை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி உயர்த்தி உள்ள நிலையில் பாஜக முற்றிலுமாக மறுத்துள்ளது. அதோடு உள்துறைக்கு பதில் 3 முக்கிய துறைகளில் ஒன்றை தேர்வு செய்யும்படி கூறியுள்ளது.

132 தொகுதிகளில் பாஜக வென்றதன் அடிப்படையில் நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜகவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது தெரிந்த விசயமே. அதன்படி பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக செயல்பட்டு பதவியேற்றனர். 

இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் இலாகா பங்கீடுவதில் உள்ள பிரச்சனைகள் தான் காரணம். அதன்படி துணை முதல்வர் பதவியை ஏற்க மறுத்து வந்த சிவசேனா தலைவர் ஷிண்டே, பிரதமர் மோடி உள்பட பாஜக மேலிட தலைவர்கள் வற்புறுத்தலின்பேரில் அந்த பதவியை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் தனக்கு உள்துறை இலாகா வேண்டும் என்று பிடிவாதம் காட்டி வருகிறார்.

ஒரு மாநிலத்தை பொறுத்தவரை சட்டம் - ஒழுங்கு நிலவரத்தை கட்டுக்குள் வைப்பதில் உள்துறை தான் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் தான் முதல்வர் பதவி கிடைக்காவிட்டாலும் உள்துறையை வாங்குவதில் ஏக்நாத் ஷிண்டே உறுதியாக உள்ளார். ஆனால் பாஜக வோ உள்துறையை ஏக்நாத் ஷிண்டேவிடம் வழங்க மறுத்து வருகிறது. ஆனால் ஏக்நாத் ஷிண்டே உள்துறையை வாங்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டி வருகிறார்.

மகாராஷ்டிராவில் வரும் 11-ந் தேதி அல்லது 12-ந் தேதி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறலாம் என்கின்றன அம்மாநில அரசியல் வட்டாரங்கள். இந்த விவகாரத்தில் இன்று இரவுக்குள் தெளிவான முடிவுகள் வெளியாகும் என்றும் வரும் 11-ந் தேதி அல்லது12-ந் தேதி அமைச்சரவை விரிவாக்கம் இடம் பெறலாம் என்றும் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஏக்நாத் ஷிண்டேவுக்கு உள்துறைக்கு பதில் பிற 3 துறைகளில் ஒன்றை தேர்வு செய்யும்படி பாஜக ஆஃபர் வழங்கி உள்ளதாம். அதன்படி வருவாய், நகர மேம்பாடு, பொதுப்பணித்துறை உள்ளிட்டவற்றில் ஒன்றை தேர்வு செய்யும்படி பாஜக ஏக்நாத் ஷிண்டேவிடம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நிதி மற்றும் திட்டமிடல் இலாகா துணை முதல்வரான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏக்நாத் ஷிண்டேவிடம் உள்துறைக்கு பதில் வருவாய், நகர மேம்பாடு, பொதுப்பணித்துறை ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய பாஜக தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றன.