மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா 77ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.!
திண்டுக்கல்

திண்டுக்கல்- அஇஅதிமுக கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 77ஆவது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப் படுகிறது. இதில் அதிமுக சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, உறுப்பினர்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சி அண்ணா பேருந்து நிலையம் திடலில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவி மரியாதை செய்தும், இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் உடன் எஸ் .கே. முகமது அலி பேரூர் கழகச் செயலாளர் ,கே.முகமது ஹாஜியார் ஆத்தூர் மேற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர், எஸ். முகமது அலி ஜின்னா ஆத்தூர் மேற்கு ஒன்றிய சிறுபான்மை அணி செயலாளர் ,ஆர். ரமேஷ் குமார் மாவட்ட பிரதிநிதி அக்பர் அலி பேரூர் கழக அவை தலைவர், சொக்கலிங்கபுரம் பாண்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், முத்து பேரூர் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் , அகமது ஆதம் ஆத்தூர் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி இணைச் செயலாளர், வார்டு செயலாளர்கள் எஸ்.பி .போஸ், பாண்டியராஜன், ராமையா, முருகன் சின்னமாயி, சுபாஷ் சந்திர போஸ்,பாக்கியம், பாண்டியராஜன் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு அன்னாரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
செய்தியாளர்
அழகர் சாமி