இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டு நோன்பு திறந்த த.வெ.க.-வினர்.!

ராணிப்பேட்டை

இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டு நோன்பு திறந்த த.வெ.க.-வினர்.!

மேல்விசாரத்தில் நடைபெற்ற இஃப்தார் திறப்பு நோன்பு நிகழ்வில் ஏராளமான தவெக கட்சியினர் பங்கேற்று நோன்பு திறந்தார்கள்.!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வை நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார் அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியை நடத்த விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ரம்ஜான் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் தங்களுடைய கட்சி சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த மார்ச் 7-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு இஸ்லாமியர்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தினார்.

அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகரத்தின் சார்பாக அப்பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேல்விஷாரம் நகர அஸ்கர் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது யாசின் மூசா ஆகியோர் ஏற்பாட்டில்  இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தமிழக வெற்றிக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் பூக்கடை மோகன் தலைமையில் அனைத்து இஸ்லாமியர்களுடன் இணைந்து தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தரையில் அமர்ந்தபடி இறைவனை தொழுது, பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர்.

இந்த நிகழ்வில் ஆற்காடு நகரம் வினோத், வாலாஜா கிழக்கு ஒன்றியம் தீனா, ராணிப்பேட்டை நகரம் சஞ்சய், வாலாஜா மேற்கு ஒன்றியம் சுரேஷ், வாலாஜா நகரம் சதீஷ், திமிரி மேற்கு ஒன்றியம் மணிகண்டன், திமிரி பேரூராட்சி விஜய், கணியம்பாடி ஒன்றியம் விஜயகுமார், ஆற்காடு மத்திய ஒன்றியம் ஸ்ரீதர், மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாவட்ட துணைச்செயலாளர்கள் அன்பு, சசிகலா, ராஜலட்சுமி, துர்காதேவி, திரவிநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் சார்பணி நிர்வாகிகள் அஜித்குமார், விக்கி, பவானி உதயகுமார், மகாவீர், மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

செய்தியாளர்

அருள் அரசன்