காவிரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா.!

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரத்தில்  காவிரிப்பாக்கம்  வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம், மாண மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட துணை செயலாளர் துரை மஸ்தான் முன்னிலை வகித்தார். கழக கொடி ஏற்றி வைத்து ஆயிரம் பேருக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கே சிட்டி பாபு, ஒன்றிய பொருளாளர் ரவி ,ஒன்றிய துணைச் செயலாளர்கள் செந்தாமரை, சங்கர் ,தேவராஜ் ,மாவட்ட பிரதிநிதிகள் மங்களம் கோபி, பாஸ்கரன் ,ரவி ,ஊராட்சி மன்ற தலைவர் ஆர் சி அர்ஜுனன், துணைத் தலைவர் சரண்யா விஜயன், கூத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சீனிவாசன், ஒன்றிய சிறுபான்மை அணி செயலாளர் சையத் மொய்தீன், கிளைச் செயலாளர்கள் பால்கார் பாலு ,கன்னியப்பன், சிவராமன், வினோத் மற்றும் ஒன்றிய பிற அடி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சையத்கலீம் அன்னதானம் ஏற்பாட்டை செய்திருந்தார்.

செய்தியாளர்

ஆர்.ஜே.சுரேஷ்