திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக டீ மாஸ்டர் தலையில் கல்லை போட்டு கொலை

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக டீ மாஸ்டர் தலையில் கல்லை போட்டு கொலை
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக டீ மாஸ்டர் தலையில் கல்லை போட்டு கொலை

திண்டுக்கல் மாசிலாமணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன் (28)  மெயின் ரோட்டில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். 

இவருக்கு திருமணம் ஆகி அம்மு என்ற மனைவியும் ஏழு மற்றும் ஐந்து வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இதற்கிடையே இன்று காலை வீட்டை  விட்டு வெளியேறிய அருண்பாண்டியன் மாலை வரை வீடு திரும்பவில்லை 
என அவர் குடும்பத்தினர் தேடிவந்த நிலையில் திண்டுக்கல் -பழனி ரயில்வே இருப்புப் பாதை அருகே உள்ள காளியம்மன் கோவில் பகுதியில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் அருண்பாண்டியன் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த நகர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி உடற் கூர் ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் குடி போதையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அருண்பாண்டியன் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது சம்பவ இடத்தில் 
ஏ எஸ் பி தலைமையிலான போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அழகர் சாமி