சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 9 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை .!
தென்காசி

துவரங்காடு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 9 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை.!
பழனி நாடார் எம் எல் ஏ யூனியன் சேர்மன் பங்கேற்பு
தென்காசி ஜூன் 21
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் கீழ வெள்ளகால் ஊராட்சிக்கு உட்பட்ட துவரங்காடு கிராமத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 9 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான எஸ்.பழனி நாடார் தலைமை வகித்தார்.
யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, துணை சேர்மன் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் சீனித்துரை, கீழவெள்ளகால் ஊராட்சி மன்ற தலைவர் பூமாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந் நிகழ்ச்சியில் துணைத் தலைவர் அமுதா, ஒன்றிய குழு உறுப்பினர் தர்மராஜா, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், சாக்ரடீஸ், வட்டார காங்கிரஸ் தலைவர் குமார்பாண்டியன், வார்டு உறுப்பினர் சீதாலட்சுமி, கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆதிநாராயணன், நாட்டாமை முத்துப்பாண்டியன், திமுக நிர்வாகி முருகன், அரசு ஒப்பந்ததாரர் அன்பரசு, ஊராட்சி செயலர் நடராஜன்,மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்