திருக்குற்றால நாத சுவாமி திருக்கோவில் நிலங்கள்நீதிமன்ற உத்தரவின் படி மீட்பு.!
தென்காசி

திருக்குற்றால நாத சுவாமி திருக்கோவில் நிலங்கள்நீதிமன்ற உத்தரவின் படி மீட்பு
தென்காசி மே 28
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றால நாத சுவாமி திருக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட பாட்ட பத்து கிராமம் பல்வேறு புல எண்களில் உள்ள மொத்தம் நஞ்சை ஏக்கர் 170.59-ம் இத்திருக்கோயிலில் இருந்து 0.1926 திருக்குற்றாலநாத சுவாமி பாட்ட பத்து கூட்டுறவு விவசாயிகள் பண்ணை சங்கத்திற்கு சாகுபடி செய்து குத்தகை செலுத்தும் வகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
1926 திருக்குற்றால் நாத சுவாமி பாட்ட பத்து கூட்டுறவு விவசாயிகள் பண்ணை சங்கம் குத்தகை சரிவர செலுத்தாததால் அருள்மிகு திருக்குற்றால நாத சுவாமி திருக்கோயிலில் இருந்து திருநெல்வேலி வருவாய் நீதிமன்றத்தில் பி டி வழக்கு எண் 18 / 2015 தாக்கல் செய்யப்பட்டு அவ்வழக்கில் குத்தகைதாரரை வெளியேற்றி திருக்கோயில் நிலங்களை சுவாதீனம் பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட உத்தரவின்படி வருவாய்த்துறை யினரால் மேற்கண்ட நிலங்களில் இருந்த பண்ணை சங்கம் வெளியேற்றப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.
மேற்படி நிலங்களில் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் மற்றும் நிர்வாக அலுவலர் ஆறுமுகம், ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர், பாட்ட பத்து கிராம நிர்வாக அலுவலர் அறங்காவலர் குழு தலைவர் டாக்டர் சக்தி முருகேசன், உறுப்பினர்கள் ஸ்ரீதர், வீரபாண்டியன், சுந்தர்ராஜன், ராமலட்சுமி, திருக்கோவில் பணியாளர்கள், திருக்கோயில் நில அலுவலர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்