ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து போலீசார் பொது மக்களிடம் விழிப்புணர்வு. !
கி.குஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி, மற்றும் மஞ்சமேடு செக் போஸ்ட் உள்ளிட்ட இடங்களில் பாரூர் போலீசார் பொதுமக்களிடையே ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தினார்கள்.
ஹெல்மெட் அணிவதால் சாலை விபத்திலிருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்ளமுடியும். தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதிவேக பயணம் செய்யக்கூடாது.
மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டக்கூடாது. முறையாக அனைத்து வாகனங்களுக்கும் ஆவணங்கள் இருக்கவேண்டும். கார் ஓட்டும்போது சீட்பெல்ட் அணியவேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மாருதி மனோ