மேட்டுப்பாளையம் உட்பட 14 கிளைச்சிறைகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவு.!
தமிழகம்

தமிழகத்தில் 14 கிளைச் சிறைகளை நிரந்தரமாக மூடுமாறு மாநில அரசு உத்தரவிட்டது.
தமிழக சிறைத் துறையின் 9 மத்திய சிறைகள்,14 9 மாவட்ட சிறைகள், பெண்களுக்கான 5 தனிச் சிறைகள், 96 கிளைச் சிறைகள், 3 திறந்தவெளி சிறைகள் உள்பட மொத்தம் 141 சிறைகள் இருந்தன.
இந்த சிறைகளில் 24,513 பேரை அடைப்பதற்குரிய கட்டமைப்பு இருந்தன. தற்போது இச் சிறைகளில், சுமாா் 20 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறைகளில் உள்ளவா்களில் சுமாா் 70 சதவீதம் போ் விசாரணைக் கைதிகள். எஞ்சிய 30 சதவீதம் பேரே தண்டனை கைதிகளாவா்.
உச்சநீதிமன்ற உத்தரவு: நாடு முழுவதும் பாதுகாப்பற்று பழுதடைந்த நிலையிலும், கைதிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும், பாதுகாப்பு குறைபாடுகளுடனும், போதுமான கைதிகள் இன்றியும் இருக்கும் சிறைகளை மூடுமாறு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதற்காக வருவாய்த் துறை, நீதித் துறை, சிறைத் துறை ஆகிய துறைகளைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, அனைத்து கிளைச் சிறைகளையும் ஆய்வு செய்து, தகுதியற்ற சிறைகளை கண்டறியலாம் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன்படி, தமிழகம் முழுவதும் கிளைச் சிறைகளை இந்தக் குழுவினா் ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வில் கிடைத்த முடிவில் அடிப்படையில், பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தகுதியற்ற சிறைகள் அடையாளம் காணப்பட்டன. இந்தச் சிறைகளை மூடலாம் என தமிழக சிறைத் துறை ஏடிஜிபி மகேஷ்வா் தயாள், தமிழக அரசின் உள்துறைக்கு பரிந்துரைத்தாா்.
இதன்படி, 1.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், 2.திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி, 3.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, 4.போளூா், 5.செய்யாறு சிறப்பு சிறை, 6.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், 7.கடலூா் கிளை சிறை, 8. கடலூா் துறைமுகம், 9.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், 10.பரமத்தி வேலூா், 11.திருச்சி மாவட்டம் மணப்பாறை, 12.முசிறி, 13.புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா், 14.திருமயம், 15.தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை, 16.விருதுநகா் மாவட்டம் சாத்தூா், 17.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா்,18.திருவாடானை, 19.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் ஆகிய 19 கிளைச் சிறைகளை நிரந்தரமாக மூடுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
14 கிளைச் சிறைகளுக்கு பூட்டு: இதில் தற்போது, 1.மதுராந்தகம் கிளைச் சிறை, 2. ஆரணி கிளைச் சிறை, 3.மேட்டுப்பாளையம் கிளைச் சிறை, 4.கடலூா் கிளைச் சிறை, 5. கடலூா் துறைமுகம் கிளைச் சிறை, 6.ராசிபுரம் கிளைச் சிறை, 7.பரமத்திவேலூா் கிளைச் சிறை, 8.மணப்பாறை கிளைச் சிறை, 9.முசிறி கிளைச் சிறை, 10.புதுக்கோட்டை கீரனூா் கிளைச் சிறை, 11.ராமநாதபுரம் திருவாடானை கிளைச்சிறை, 12.தஞ்சாவூா் பட்டுக்கோட்டை கிளைச் சிறை, 13.விருதுநகா் சாத்தூா் கிளைச் சிறை, 14.திருச்செந்தூா் கிளைச் சிறை ஆகிய சிறைகளை நிரந்தரமாக மூடும்படி தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
இதில் மேட்டுப்பாளையம், கடலூா் துறைமுகம், கீரனூா், பட்டுக்கோட்டை, திருவாடானை, சாத்தூா், திருச்செந்தூா் உள்ளிட்ட 9 கிளைச் சிறைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. ஏற்கெனவே செய்யாறு சிறப்புச் சிறை கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டு, வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவு மூலம் மூடப்படும் சிறைகளில் உள்ள கைதிகள் படிப்படியாக அருகே உள்ள பிற கிளைச் சிறைகளுக்கும், மாவட்ட சிறைகளுக்கும், மத்திய சிறைகளுக்கும் மாற்றப்பட்டு வருகின்றனா். மூடப்படும் கிளைச் சிறைகளிலும் பணியாற்றும் சிறைக் காவலா்கள், அமைச்சுப் பணியாளா்களையும் அருகேயுள்ள சிறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் அடிப்படையில் பணிமாற்றம் செய்யும்படி தீரஜ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது: அதேபோல மூடப்படும் கிளைச் சிறைகளில் இருக்கும் மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருள்கள், அலுவலக பொருள்கள், ஆயுதங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை அருகேயுள்ள மத்திய சிறைகளுக்கு கொண்டு செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அங்குள்ள தொலைபேசி இணைப்பை பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்படைக்கும்படியும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசின் இந்த உத்தரவு காரணமாக, சிறைத் துறையினா் 14 கிளைச் சிறைகளையும் நிரந்தரமாக மூடும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனா். இச் சிறைகளை மூடிய பின்னா், அவை வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன