திருப்பத்தூரில் எருது விடும் திருவிழா.!

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் எருது விடும் திருவிழா.!

திருப்பத்தூர் மாவட்டம்,  நாட்றம்பள்ளி பகுதியில்   4 ஆம் ஆண்டு   மாபெரும் எருது விடும் விழா-200 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு-காளையர்கள் உற்சாகம்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியில்  4ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் தலைமையிலும் ஊர் பொதுமக்கள் முன்னிலையிலும்  நடைபெற்றது.

இந்த எருது  விடும் விழாவில் கால் நடை மருத்துவரால்  பரிசோதனைக்கு உட்பட்ட காளைகளை  விழாவில் அனுமதிக்கப்பட்டது  

 இருநூறுக்கும் மேற்ப்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுப்பட்டனர்

இந்த எருது விடும் திருவிழாவில் 
 திருப்பத்தூர் ஆம்பூர் வாணியம்பாடி  மற்றும் கிருஷ்ணகிரி தருமபுரி, வேலூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின மேலும் குறைந்த நொடியில் இலக்கை எட்டிய காளைகளுக்கு முதல் பரிசாக 100000 ரூபாயும் இரண்டாவது பரிசாக 80,000 ரூபாயும், மூன்றாவது பரிசாக 70,000 ரூபாய் என மொத்தம் 66 பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த எருது விடும் திருவிழாவில் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து  ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு எருது விடும் திருவிழாவை கண்டு களித்தனர் இந்த எருது விடும் விழாவில் மருத்துவ துறை, காவல் துறை ,தீயணைப்பு துறை, கால்நடை மருத்துவ துறை,
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ந.வெங்கடேசன்