தென்காசி ரயில்வே பாதை ரோடை சரி செய்ய கோரி காங்கிரஸ் பிரமுகர் எம்பி க்கு கோரிக்கை மனு.!
தென்காசி

தென்காசி ரயில்வே பாதை ரோடை சரி செய்ய கோரி காங்கிரஸ் பிரமுகர் எம்பி க்கு கோரிக்கை மனு
தென்காசி ஏப்ரல் 22
தென்காசி ரயில்வே பாதை ரோட்டினைசரி செய்ய தென்காசி நகரகாங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் ஆறுமுகம் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணிக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது தென்காசியில் இருந்து திருநெல்வேலி செல்லும் ரயில்வேயின்முதலாவது கேட் முதல் இரண்டாம் கேட் வரை இரும்பு பாதைக்கு தென்புறமாக புதர்களும் முள்களும் மண்டி கிடக்கிறது.
இதனை அகற்றி தார் சாலை அமைத்தால் ஆய்க்குடி சுரண்டையிலிருந்து வருபவர்களும் நகரத்தில் உள்ளவர்களும் சுலபமாக ரயில் நிலையத்தை எளிதாக செல்ல முடியும் போக்குவரத்து நெரிசலும் நகருக்குள் குறையும்.
எனவே பலருக்கும் நன்மை பயக்கக்கூடிய இதனை சரி செய்து தருமாறு கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளருக்கு 15 8 2021 ல் கடிதம் எழுதி இருப்பதாகவும் அதன் நகலை இணைத்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர்
AGM கணேசன்