தொடரும் அன்லைன் வர்த்தக மோசடி.! பாதிக்கப்பட்ட நபர் நமது சேனலுக்கு பேட்டி.!

ராணிப்பேட்டை

தொடரும் ஆன்லைன் கொரியா் மோசடி

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே ஆன்லைன் ஆா்டரில்  மொபைல் போனுக்கு பதில் 120 ரூபாய் டவ் குளியல் சோப் அதிா்சியில் வாடிக்கையாளா்.

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அஞ்சலகத்தெருவை சோ்ந்தவா் யோகேஷ் இவா் 25 ஆயிறம் மதிப்புள்ள மோட்டோரோலா எட்ஜ் பியூசன் (motorola edge fusion ) போனை பிலிப்காா்ட் ஆன்லைன் மூலம் 22,176  ரூபாய்க்கு ஆா்டர் செய்து பணம் செலுத்தியுள்ளாா். இந்நிலையில் ஆா்டா் செய்த போன் ஞாயிற்றுகிழமை அன்று இகாம் கொரியா் மூலப் பாா்சல்  சம்மந்தபட்டவருக்கு டெலிவரி செய்துள்ளனா். 

இதனிடையே கொரியரில் வந்த பாா்சலில் மோட்டோரோலா எட்ஜ் பியூசன் (256GB) போனுக்கு பதிலாக 120 ரூபாய் மதிப்புள்ள டவ் குளியல் சோப்பு ஒன்று இருந்துள்ளதை கண்டு அதிா்ச்சியடைந்தார்.

இது குறித்து சம்மந்தப்பட்ட கொரியர் ஏஜன்ட்க்கு தகவல்  கொடுத்துள்ளதாகவும் விரைவில் மோட்டோரோலா எட்ஜ் பியூசன் (256GB) போன் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்

ஆர்ஜே.சுரேஷ்குமார்.