காவேரிப்பட்டினத்தில் ஓபிஎஸ் அணி மற்றும் மாற்று கட்சியினர் 1000 பேர் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.!
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டினத்தில் ஓபிஎஸ் அணி மற்றும் மாற்று கட்சியினர் 1000 பேர் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியம், ஓபிஎஸ் அணியின் ஒன்றிய செயலாளர் கேபிள் சின்னசாமி ஏற்பாட்டில், அமமுக ஒன்றிய கழக செயலாளர் சின்னராஜ், தமிழக கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய மாநில தலைவர் ஐயப்பன், நகர செயலாளர் மணி, கரடி அள்ளி தொகுதி செயலாளர் லோகா பிராமன் உள்ளிட்ட கால்வேஅள்ளி, கரடி அள்ளி, ஜெகதாப், சந்தாபுரம்,திம்மாபுரம், மலையண்டஅள்ளி, மிட்ட அள்ளி,எர்ர அள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த மாற்று கட்சியினர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர்,பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.தே.மதியழகன்,.MLA தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி அவர்கள் முன்னிலையில் தங்களை திமுகவை இணைத்துக் கொண்டனர்.
உடன் மாநில மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், பாக முகவர்கள் கிளை செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், முன்னாள் இந்நாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், என அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
