உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், ஒன்றிய செயலாளர் தனசேகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.!
கிருஷ்ணகிரி

சோக்காடி மற்றும் மோரமடுகு ஊராட்சியில் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், ஒன்றிய செயலாளர் தனசேகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியம், சோக்காடி மற்றும் மோரமடுகு ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் அவர்களின் வழிக்காட்டுதலின்படி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகர்
தலைமையில் நடைபெற்றது. உங்கடன் ஸ்டாலின் திட்ட முகாமினை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சோக்காடி, மற்றும் மோரமடுகு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமில் அனைத்து அரசு துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
மேலும் இந்த முகாமில் சோக்காடி மற்றும் மோரமடுகு ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலைஞரின் மகளீர் உரிமை தொகை, வீட்டுமனைப்பட்டா, இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம், கல்வி கடன், ரேசன் அட்டை , குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்வு காண வேண்டி துறைவாரியாக மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கினர்.
மேலும் இந்த சிறப்பு முகாமில் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது.
மேலும் இந்த முகாமில் திமுக பொதுக்குழு உறுப்பினர் திருமதி சித்ரா சந்திரசேகர், திமுக மாவட்ட பிரதிநிதி அருள்முத்து, ஊராட்சி செயலாளர்கள் ஆனந்தன், முனிராஜ் மற்றும் திமுக வைசேர்ந்த நிர்வாகிகளான சத்திவேல், பொன்னுசாமி உள்ளிட்ட அனைத்து துறை வாரியாக அலுவலர்கள் மற்றும் ஊராட்சி கழக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ