தலைக்கேறிய போதை, கற்பை பறிகொடுத்த பெண், கற்பழித்தவரையும்,காரணமான தோழியையும் கைது செய்த மகளிர் காவல்துறை, !
தமிழகம்

வேலூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்துள்ளார். புகார் மனுவில் கூறியிருப்பதாவது :
'நான் வேலூரில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். பட்டப் படிப்பு முடித்திருக்கிறேன். படிப்பு முடிந்தவுடன் சென்னையில் எனக்கு ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை கிடைத்தது.. அருகில் பெண்கள் விடுதி ஒன்றில் தங்கி இருந்தபடி வேலைக்கு சென்று வந்தேன். 6 மாதங்கள் அங்கு பணியாற்றினேன். பின்னர் வேலை பிடிக்காமல் அந்த வேலையை ராஜினாமா செய்தேன்.
'மது அருந்துவோம்'
எனக்கு மது அருந்தும் பழக்கம் புகை பிடிக்கும் பழக்கமும் இருந்தது. என்னுடன் வேலை பார்த்த ப்ளோரிடா என்பவர் எனக்கு நல்ல தோழி ஆவார். அவருக்கும் மது மற்றும் புகைப்பழக்கம் இருந்தது. நாங்கள் இருவரும் அவ்வப்போது தனியாக ஹோட்டலில் அறை எடுத்து தங்கி மது அருந்துவோம்.
அந்த வகையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி ஃப்ளோரிடா என்னை மது விருந்துக்கு அழைத்தார். இதனால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினோம்..
தோழியின் நண்பர்களுடன் மதுவிருந்து
மதிய உணவுக்குப் பிறகு அந்த அறைக்கு நான் சென்றேன். ஃபுளோரிடா தனியாக வராமல் தன்னுடன் இரண்டு இளைஞர்களை அழைத்து வந்தார். அவர்களை நம்பலாம் என்றும் அவர்களின் ஒருவர் மனாசே (வயது 29), அவர் சென்னையில் உள்ள விவசாயத் துறை அலுவலகம் ஒன்றில் ஊழியராக வேலை பார்க்கிறார் என்றும் மற்றொருவரின் பெயர் ஆக்னசே (வயது 30) என்றும் அவர் சொந்தமாக சென்னையில் தொழில் செய்வதாகவும் அறிமுகம் செய்து வைத்தார்.
இதன் பின்னர் நாங்கள் நால்வரும் மது விருந்தை தொடங்கினோம். போதை தலைக்கேறும் வகையில் மது குடித்தேன். அதன் பிறகு என்ன நடந்தது என என்று எனக்கு தெரியவில்லை.
நிர்வாண கோலம்
அதிகாலை 4:30 மணியளவில் நான் போதை மயக்கத்தில் எழுந்து பார்த்தபோது எனது ஆடைகள் கழற்றப்பட்டிருந்தது. நான் நிர்வாண நிலையில் படுத்திருந்தேன். எனது அருகே மனாசேவும் நிர்வாண நிலையில் படுத்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவரை தட்டி எழுப்பி சண்டை போட்டேன். அவர் தான் போதை மயக்கத்தில் இருந்ததால் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது என்று சமாளித்தார். பின்னர் என் காலில் விழுந்து என்னை மன்னித்து விடுமாறு கெஞ்சினார். ஆனால் நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை உணர்ந்தேன். இதற்கு காரணம் மனாசே என்றும் தெரியவந்தது.
பக்கத்து அறையில் ஃப்ளோரிடா ஆக்னசேவுடன் தங்கியிருந்தார். ஃபுளோரிடாவுடனும் நான் சண்டை போட்டேன். ஆனால் அவரும் தனக்கு ஒன்றும் தெரியாது என நழுவினார்.
மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்
பின்னர் நான் வேலூருக்கு புறப்பட்டு வந்தேன் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று மருத்துவர்கள் என்னை பரிசோதித்து விட்டு நான் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். மேலும் அந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் மூலமாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் என்னை விசாரித்தனர். அதன்பிறகு என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அறிந்து என் பெற்றோர் மிகுந்த மன வருத்தம் அடைந்தனர். எனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி போலீஸ் உரிய விசாரணை நடத்தி எனக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்.' இவ்வாறு அந்த இளம் பெண் தனது புகாரில் கூறியிருக்கிறார்.
இளம் பெண்ணின் இந்த பகீர் புகாரை தொடர்ந்து வன்கொடுமை வழக்குப்பதிவு செய்த ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போதை மயக்கத்தில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயத்துறை ஊழியர் மனாசே மற்றும் தோழி ஃப்ளோரிடா ஆகியோரை கைது செய்தனர்.. இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.