குரோம்பேட்டை, நாகல்கேணியில் த வெ க சார்பில் மாபெரும் இணைப்பு விழா.!
T V K , த வெ க

குரோம்பேட்டை, நாகல்கேணியில் த வெ க சார்பில் மாபெரும் இணைப்பு விழா
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பம்மல் தெற்கு பகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் குரோம்பேட்டை, திருநீர்மலை மெயின் ரோடு, நாகல்கேணியில் கழக கொடியேற்றும் விழா மற்றும் நலதிட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைவர் மின்னல் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் 100 ற்கும் மேற்பட்டோர் தங்களை த வெ க கட்சியில் இணைத்து கொண்டனர்.
இந்த மாபெரும் இணைப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு த வெ க வில் தங்களை இணைந்து கொண்டனர்.
முன்னதாக நாகல்கேணி எம்.ஜி.ஆர்.சிலை அருகில் கட்சிக் கொடியேற்றி வைத்து பேரணியாக நிகழ்ச்சி நடைபெறும் தனியார் மண்டபம் வரை நடந்து வந்தனர்.
இறுதியாக அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
S S K