கிருஷ்ணகிரி அருகே ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளியில் மழைலையர் பட்டமளிப்பு விழா.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளியில் மழைலையர் பட்டமளிப்பு விழாவில் யு.கே.ஜி. முடித்த முதல் வகுப்புக்கு அடியெடுத்து வைக்கும் பள்ளி குழந்தைகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளியில் அமைந்துள்ள ஆக்ஸ்ஃபோர்டு பப்ளிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா மற்றும் அவார்டு வழங்கும் விழா நடைப்பெற்றது.
அன்னை கண்ணம்மாள் தர்மராசன் கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் திரு.மகேந்திரன் தலைமை தாங்கினார்,
பள்ளியின் இயக்குனர் திருமதி கவிதா ராணி மகேந்திரன், பள்ளியின் முதல்வர் அருட் சகோதரி ஜெசிந்தா முத்தையா மற்றும் பள்ளி நிர்வாகிகளான முனிகிருஷ்ணன், சேகர், ஜாக்கப் ஜார்ஜ், கராத்தே மாஸ்டர் மாரியப்பன் மற்றும் வெங்கடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அதியமான் கல்வி குழுமத்தின் நிறுவனர் சீனி.திருமால் முருகன் கலந்துக் கொண்டு விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து இப்பள்ளியில் U.K.G. வகுப்பு முடித்து விட்டு முதல் வகுப்பில் சேர உள்ள பள்ளி குழந்தைகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்
அப்போது பெரும்பாலும் கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கு மட்டுமே பட்டங்கள் வழங்கக்கப்பட்டு வந்த நிலையில் U.K.G. வகுப்பு முடித்து விட்டு முதல் வகுப்பில் சேர உள்ள குழந்தைகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டதாகவும் கல்வியின் சிறப்பு பற்றி தெரிவித்தார்,
மேலும் இதனைத் தொடர்ந்து பள்ளியில் கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற விளையாட்டு, நடனம் அறிவியல் கண்காட்சி, மாறுவேடப்போட்டி, வினாடி வினா, உடை அலங்காரம் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கும் அவார்டு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்படது.
மேலும் பள்ளி குழந்தைகளுக்கு இடையே படிப்பின் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் விதமாக இந்த பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது,
மேலும் இந்தப்பள்ளியில் தாய், அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு சிறப்பு கட்டணச்சலுகையில் கல்வி கற்பிக்கப்பட்டு வருதாக பள்ளியின் நிறுவனர் மகேந்திரன் குறிப்பிட்டார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழாவில் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் கிராம மக்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ