கொடி, பெயர்ப் பலகை வைக்கச் சென்ற த வெ க - வினர் திமுக -வில் இணைந்தனர்.!
T V K , DMK

சென்னை தண்டையார்பேட்டையில் கொடி வைக்கச் சென்ற தவெகவினர், திடீரென திமுகவில் இணைந்ததால் பரபரப்பு.!
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நட்டு வைப்பதற்கு, தவெகவைச் சேர்ந்த சில இளைஞர்கள் அங்கு வந்தனர். அதற்கான பெயர்ப் பலகையை அவர்கள் அங்கு வைத்துக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென போலீசார் வந்ததால் பதற்றம் நிலவியது.
இதனையடுத்து இங்கு அனுமதி இன்று கொடி, பெயர்ப் பலகை ஆகியவற்றை வைக்கக்கூடாது என போலீசார் கூறி உள்ளனர்.
அது மட்டுமல்லாது, அங்கு வந்த திமுக இளைஞரணி நிர்வாகிகளும், அனுமதி இல்லாமல் இவ்வாறு கட்சி பேனர், கொடி, பெயர்ப்பலகை ஆகியவற்றை வைக்கக்கூடாது எனக் கூறி உள்ளனர்.
பின்னர் அவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. திடீரென பெயர்ப் பலகை எல்லாவற்றையும் தவெகவினரே அகற்றி கொண்டு சென்றனர்.
பின்னர் அடுத்த சில நிமிடங்களில், தவெக கொடி, பெயர்ப்பலகை வைக்க வந்த நபர்கள், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இது தற்போது பேசும் பொருளாகி உள்ளது.