பாஜகவின் பட்ஜெட் விளக்கத்தை பொதுமக்களிடையே எடுத்துரைத்த மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி.!
ராணிப்பேட்டை

பள்ளி கல்வித்துறை அமைச்சர் தனது சொந்த மாவட்டத்திலேயே கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்பறையை நடத்துவது மிகவும் வருத்தத்தை அளித்துள்ளதாகவும் பள்ளி கல்வித்துறைக்கு வழங்கிய நிதியை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை என பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி குற்றச்சாட்டு
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பாஜக சார்பில் (2025-2026) பட்ஜெட் விளக்க மாவட்ட பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் நெமிலி ஆனந்தன் தலைமையில் மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன் வரவேற்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் தணிகாசலம் முன்னாள் மாநில செயற்கூழு உறுப்பினர் பிரகாஷ் முன்னாள் மாவட்ட தலைவர் விஜயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி கலந்துகொண்டு பாஜகவின் பட்ஜெட் விளக்கத்தை பொதுமக்களிடையே எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்..
அப்போது கூட்டத்தில் பேசிய கார்த்தியாயினி தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யா மொழியின் சொந்தத் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கட்டிடம் இல்லாமல் மரத்தின் கீழ் வகுப்பறையை நடத்துவது மிகவும் வேதனை அளிப்பதாகவும் ஆனால் அவர்களை கேட்டால் தமிழகத்திற்கு பள்ளிக் கல்வித் துறை சார்பாக எந்த நிதியையும் ஒதுக்கப்படவில்லை என்றும் ஆனால் மத்திய அரசின் சார்பாக தமிழகத்திற்கு பள்ளி உட்கட்டமைப்புக்காக 2021-2025 வரை சமஸ்கா சக்ஷா திட்டத்தின் கீழாக 5,583 கோடிகள் ஒதுக்கப்பட்ட உள்ளனர் அதனை பள்ளிக் கல்வித் துறையினர் பள்ளிகளில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை என்றும் தனது சொந்த மாவட்டத்திலேயே வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் மரத்தின் அடியில் அமர்ந்து படிப்பது மிகவும் வருத்தத்தை தருவதாகவும் ஒரு பள்ளியில் பயின்று வரும் மாணவிக்கு மூன்று ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக தொல்லை அளித்தார்கள் அதனை இந்த அரசாங்கத்தால் கேட்க முடிந்ததா என்றும் பின்னர் தமிழகத்தில் தமிழைக் காப்போம் தமிழைக் காப்போம் என்று திமுக அரசு சொல்லிக் கொண்டு வருகிறது ஆனால் வருடம் வருடம் தமிழில் மட்டும் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி அடையாமல் இருக்கின்றனர் அதனை சீர்படுத்துவதற்காக தமிழகத்தில் ஏதாவது முயற்சியை எடுத்துள்ளார்களா என்றும் மத்திய அரசு குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு படிப்பினை அளிக்கலாம் என்று கூறும் போது செவி சாய்க்கிரதா இந்த தமிழக அரசாங்கம் ஆனால் மத்திய அரசு தமிழகத்தை ஏமாற்றுகிறது வஞ்சிக்கிறது என்ற குற்றச்சாட்டினை மட்டும் கூறி கொண்டே உள்ளனர்.
பின்னர் டாஸ்மாக் கடையில் விற்பனை செய்வதில் ஒரு ரூபாய் மட்டும் கஜானாவிற்கு வருகிறது ஆனால் மீதமுள்ள ஒன்பது ரூபாய் யாருக்கு செல்கிறது.தனிப்பட்ட முறையில் நேரடியாக அமைச்சர் மூலமாக தனது சுய குடும்பத்திற்கு செல்கின்றது என்று குற்றச்சாட்டினையும் எழுப்பினார் இதுதான் நீங்கள் செய்யக்கூடிய ஆட்சியின் மிகப்பெரிய சாதனையா என்று கேள்வி எழுப்பினார் மேலும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் சம்பவம் குறித்து உயர் நீதிமன்றம் அறிவிப்பு கொடுத்து போராட்டம் நடைபெறும் என சொன்ன அடுத்த நொடியே குவிந்த கூட்டத்தால் இஸ்லாமியர்கள் இந்த சம்பவத்திற்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என மறுப்பு தெரிவித்தார்கள் எனவே வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தாமரை மலர்ந்து தமிழகத்தில் முதல்வராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்பது உறுதி என்று சூளுரைப்போம் இவ்வாறு கூறினார்..
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கலைவாணிமூர்த்தி, சம்பத்குமார், சபாபதிபாண்டியன் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முன்னாள் நகர தலைவர் சிவமணி, மருத்துவர் சஞ்சய்லோகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
செய்தியாளர்
அருள் அரசன்