வேளச்சேரி தெருக்களில் ஓடும் சாக்கடை நீரால் நோய் தொற்று பரவும் அபாயம்
Chennai
வேளச்சேரியில் தெருக்களில் ஓடும் சாக்கடை நீரால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அவலம், நோய்த் தொற்று பரவும் அபாயம்.
புயல் ஓய்ந்தும் துர்நாற்றம் ஓயவில்லை என குற்றச்சாட்டு.
சென்னை வேளச்சேரி, 176வது வார்டுக்குட்பட்ட ராஜிவ் நகர், லட்சுமிநகர் 3வது தெருவில் பாதாள சாக்கடை கால்வாய் நிரம்பி தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
பாதாள சாக்கடை கால்வாய் நிரம்பி கழிவுநீர் தெருக்களில் தேங்கி நின்று, கொசுக்கள் உற்பத்தியாகி, கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது.
இதனால் தெரு முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கும் நிலையில் நடந்து செல்ல முடியாத சூழலும், நோய் தொற்று ஏற்படும் அவலமும் உருவாகியுள்ளது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை சாக்கடையில் நடக்க வைத்து அழைத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது
ஃபெஞ்சல் புயல் ஓய்ந்தும், துர்நாற்றம் ஓயவில்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர்.
கழிவுநீர் அடைப்பை சரிசெய்து தெருக்களில் இருக்கும் கழிவுநீரை அகற்றிவிட்டு, நோய்த்தொற்று பரவாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.