காட்டிநாயனப்பள்ளி ஊராடசியில் நடைப்பெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் .!
கிருஷ்ணகிரி

காட்டிநாயனப்பள்ளி ஊராடசியில் நடைப்பெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
காட்டி நாயனப்பள்ளி ஶ்ரீ முருகன் திருக்கோவிலில் நடைபெற்ற இந்த முகாமினை கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் கலந்துக் கொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து காட்டிநாயனப்பள்ளி ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமில் அனைத்து அரசு துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
மேலும் இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் நூறு நாள் வேலை,கலைஞரின் மகளீர் உரிமை தொகை, வீட்டுமனைப் பட்டா, இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம், கல்வி கடன், ரேசன் அட்டை , குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்வு காண வேண்டி துறைவாரியாக மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கினார்கள். மேலும் இந்த சிறப்பு முகாமில் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது,
மக்கள் பயன் பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமில் மாவட்ட துணைச் செயலாளர் திருமதி சாவித்திரி கடலரசு மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட கலை இலகிய பகுத்தறிவு துணை அமைப்பாளர் ஆனந்தன், மாவட்ட இளைஞர் அணி துணை மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
மேலும் இந்த முகாமில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராமச்சந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் பிரபாகரன், ஒன்றிய துணை செயலாளர் மாறன் முருகன்
மற்றும் திமுகவைச் சேர்ந்த சாமுண்டி ,சீனிவாசன், பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ