காந்திஜி நூற்றாண்டு மண்படத்தினை காங்கிரஸ் கட்சிக்கு மிட்டெடுப்பது தொடர்பான விரிவான ஆலோசனை காங்கிரஸ் மாநில தலைவர் தலைமையில் நடைபெற்றது.!
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டினம் காந்திஜி நூற்றாண்டு மண்படத்தினை காங்கிரஸ் கட்சிக்கு மிட்டெடுப்பது தொடர்பான விரிவான ஆலோசனை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காந்திஜி நூற்றாண்டு மண்டத்தினை திடிரென காசிலிங்கம் என்பவர் காந்திஜி நூற்றாண்டு மண்டபம் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமில்லை எனவும், இது டிரஸ்ட்டுக்கு சொந்தமானது என்று நிதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பான பேச்சு வார்த்தை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினர்களையும் வரவழைத்து பேச்சு வார்த்தையும் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் காந்தி மண்டபத்தின் உண்மை சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னால் காக்கிரஸ் தலைவரும் மாநில பொதுக் குழு உறுப்பினருமான எல் சுப்பிரமணியன் தமிழக தாங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களை சென்னையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து எடுத்துரைத்து அதற்கான ஆதாரத்தினையும் வழங்கினார்.
பின்னர் காந்திஜி நூற்றாண்டு மண்பாண்டபத்தினை
மீட்டெடுப்பது தொடர்பான விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது,
இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை அவர்களில் தலைமையில் நடைப் பெற்ற இந்த ஆலோசனையில்
வேளாச்சேரி சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் கொராடாவுமான அசேன்மௌலானா, மாநில செயலாளர் திருச்சி முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது,
இந்த விரிவான ஆலோசனையில் காவேரிப்பட்டினத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காந்திஜி நூற்றாண்டு மண்டபத்தினை மீட்டெடுக்க அதற்கான நடவடிக்கையில் மாநில காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் எ காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இந்த மண்டபத்தினை போலியான டிரஸ்டை உருவக்கி அபகரிக்க முயல்வதை தடுத்து நிறுத்தி காந்திஜி நூற்றாண்டு மண்டபம் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே சொந்தமான இடம் என்பதை உறுதி செய்ய அதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படும் அதற்கான நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்தார்.
அப்போது முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்துக்குமார், முன்னால் காங்கிரஸ் நகர தலைவர் தக்காளி தவமணி,
காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்
ராமசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi (MR)