மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசர நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் மெஹ்ரிபா பர்வீன் அஷ்ரப்அலி தலைமையில் நடைபெற்றது.!

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசர நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் மெஹ்ரிபா பர்வீன் அஷ்ரப்அலி தலைமையில் நடைபெற்றது.!

மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசர நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் மெஹ்ரிபா பர்வீன் அஷ்ரப்அலி தலைமையில் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட முக்கியமான பல்வேறு செயல் திட்டங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

அதில் 6 வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதில் மழைக்காலங்களில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் கழிவுநீர் செல்லும் பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும் , ஆழ்துளை கிணறு டேங்கில் இருந்து குழாய் பகிர்மானம் செய்யப்பட வேண்டும்,மகாதேவபுரம் சத்துணவு கூடம் , ஆனைக்கார தெருவில் அமைந்துள்ள S.M. நகர் துவக்கப் பள்ளியில் சத்துணவு கூடம் புதியதாக கட்டப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

6 வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றி தந்த நகர மன்ற தலைவர் மெஹ்ரிபா பர்வீன் அஷ்ரப்அலி, நகர மன்ற துணை தலைவர் அருள் வடிவு முனுசாமி, நகராட்சி ஆணையாளர் அமுதா , M.E.,AE, JE மற்றும் நகராட்சி நிர்வாகம் என அனைத்திற்கும் நன்றி தெரிவித்தார்  6 ஆவது வார்டு நகரமன்ற உறுப்பினர் அ.ஸமீனா பேகம் ஹக்கீம்.