அமெரிக்காவில் இருந்து கோவைக்கு திரும்பினார் ஜக்கி வாசுதேவ். ! மக்கள் அமோக வரவேற்பு
கோவை

அமெரிக்காவில் இருந்து 8 மாதம் கழித்து தமிழகம் திரும்பிய இஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை மக்கள் குவிந்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. சத்குரு ஜக்கி வாசுதேவால் நிறுவப்பட்ட இந்த மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதி யோகி சிலை உள்ளது. ஆண்டுதோறும் மகாசிவராத்திரி தினத்தில் ஈஷா யோகா மையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் ஈஷா அறக்கட்டளையின் சத்குரு ஜக்கி வாசுதேவ் அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் இருக்கும் ஈஷா யோக மையத்திற்கு கடந்த மே மாதம் சென்ற சத்குரு ஏழு மாதங்களுக்குப் பிறகு இன்று தமிழ்நாடு திரும்பினார். அவரை வரவேற்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் குவிந்தனர்.
ஜக்கி வாசுதேவ் மாலை 6 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு மட்டுமே திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆரத்தி காட்டி வரவேற்றனர். இதைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்தில இருந்து ஈஷா யோக மையம் வரை பல்வேறு இடங்களில் மக்கள் திரளாக அணிவகுத்து நின்று மலர்களை தூவியும், விளக்குகளை ஏந்தியும், மேள தாளத்துடன் சத்குருவை வரவேற்றனர்.