தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி.!
இந்தியா

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர்.!
எனது அமைச்சரவை சகாவான ஜி கிஷன் ரெட்டி இல்லத்தில் நடைபெற்ற சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் பங்கேற்றேன். மிகச்சிறந்த கலாச்சார நிகழ்வையும் கண்டுகளித்தேன்.
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சங்கராந்தியையும், பொங்கல் பண்டிகையையும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். நமது கலாச்சாரத்தின் வேளாண் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஏராளமானதும், புதுப்பிக்கத் தக்கதுமான நன்றியின் கொண்டாட்டமாக இது விளங்குகிறது.
சங்கராந்திக்கும், பொங்கல் பண்டிகைக்கும் எனது நல்வாழ்த்துகள். வரவிருக்கும் அறுவடை பருவத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.