திமுக - வை 2026 சட்டமன்ற தேர்தலில் வெளியேற்றுவதே லட்சியம் என பாஜக புதிய மாவட்ட தலைவர் சூளுரை
சென்னை
திமுக - வை 2026 சட்டமன்ற தேர்தலில் வெளியேற்றுவதே லட்சியம் என பாஜக புதிய மாவட்ட தலைவர் சூளுரை.
சென்னை கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் அறிவிப்பு.
சென்னை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் அக்கட்சியின் புதிய மாவட்ட தலைவர் அறிவிப்பு கூட்டம் பள்ளிகரணை ரேடியல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட பாஜகவினர் கலந்து கொண்டு புதிய மாவட்ட தலைவர் அறிவிப்பை வெளியிட்டனர்.
பாஜக சென்னை கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர், வேளச்சேரி, ஆலந்தூர் தொகுதிகளை உள்ளடக்கியது அதற்கு புதிய மாவட்ட தலைவராக ஜி.குமார் ஒரு மனதாக அறிவிக்கப்பட்டார்.
மாவட்டத் தலைவர் அறிவிக்கப்பட்ட உடன் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். அனைவரும் மாவட்ட தலைவர் குமாரை தோளில் தூக்கி சுமந்து மகிழ்ந்தனர்.
பின்னர் கட்சியினர் ஆளுயர மாலை அணிவித்து சால்வை அணிவித்து ஒவ்வொருவரும் புதிய மாவட்ட தலைவரை வாழ்த்தினர்.
இறுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதிய பாஜக மாவட்ட தலைவர் ஜி.குமார்:- சென்னை கிழக்கு மாவட்ட தலைவராக என்னை பரிந்துரை செயதமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். சென்னை கிழக்கு மாவட்டத்தில் வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வேன். செயல்பாடு வலுவாக இருக்கும், திமுகவை 2026 சட்டமன்ற தேர்தலில் வெளியேற்றுவதே லட்சியம் என்றார்.
செய்தியாளர்
S S K
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் ரபி ( MR )